குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது இலங்கை அரச விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலின் 29ஆம் ஆண்டு நினைவுதினம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
1993ஆம் ஆண்டு இதே தினம் கிபிர் விமானங்கள் கண்மூடித்தனமாக குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின்மீது மேற்கொண்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் அங்கு வழிபாட்டிற்காக சென்றிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பலர்காயமடைந்தனர்.

இப்படுகொலை தொடர்பான கண்டன அறிக்கைகள் பல வெளியிடப்பட்ட போதும் இலங்கை அரசு இந்நிகழ்வு பற்றி கரிசனை காட்டாது பாராமுகமாக இருந்ததுடன் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் எதுவும் இதுவரை செய்யவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin