இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் நெறிப்படுத்தலில் அமெரிக்கன் கோணர் நிலையத்தின் (American Corner) யாழ் கிளையின் ஊடாக நடாத்தப்பட்ட (First Aid) உயிர்க்காப்பு தொடர்பான செயலமர்வில் புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த 15 மாணவர்கள் கலந்து பயிற்சிகளை பெற்றனர்.

பாடசாலை வேளைகளிலும் அதற்கு முன்பும், பின்பும் இடம்பெறக்கூடிய விபத்துக்களின் போது முதலுதவி சிகிச்சைகளை வழங்கி பாடசாலை மாணவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது பற்றிய விளக்க செயற்பாட்டுமுறை ஊடாக சிறப்பான பயிற்ச்சி இவர்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சிக்கான வளவாளர்களாக அமெரிக்க தேசத்தை சேர்ந்தவர்கள் இணைந்து பயிற்சி அளித்ததுடன் இம்மாணவாகள் ஏனைய மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான தகுதியையும் பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin