Category: What’s New

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுதாக்குதலின் 30ஆம் ஆண்டு நினைவு

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது இலங்கை அரச விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுதாக்குதலின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு இதே தினம் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது…

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் யாழ். மறைமாவட்ட ஆயரை சந்திப்பு

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அம்பலவாணர் சிவபாதசுந்தரன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 17ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் ஞாயிறு தினங்களில் தனியார் கல்வி நிறுவனங்களின்…

அன்புள்ள ஆரியசிங்க நூலுக்கு ‘கொடகே தேசிய இலக்கிய விருது’

கொழும்பு கொடகே வெளியீட்டகத்தினால் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் கொடகே தேசிய சாகித்திய விழா கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு தேசிய நூலக சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் திரு. தேசபந்து கொடகே அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழா

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழா 12ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். காலை…

கத்தோலிக்க திருமறைத்தேர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலைரீதியாக முன்னெடுக்கப்படும் கத்தோலிக்க திருமறைத்தேர்வு 25ஆம் திகதி வருகின்ற சனிக்கிழமை நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். மறைமாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் கத்தோலிக்க மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் இத்தேர்வு காலை 9மணி தெடக்கம் 12மணிவரை நடைபெறுவுள்ளதெனவும்…