IMG-b6eed32c9e12a0b732396723899a29dc-Vமார்ச்.6. பருத்தித்துறை மறைகோட்ட இளையோருக்கான கருத்தரங்கும் புதிய நிர்வாக தெரிவும் 13.02.2018(செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் பருத்தித்துறை மறைகோட்ட இளையோர் ஒன்றியத்தின் இயக்குனர் அருட்திரு மைக்டொனால்ட் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘இளையோர் வாழ்வை கவர்ந்திழுக்கும் நவீன தொடர்பு சாதனங்கள்’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு மற்றும் சமூகத்தொடர்பு ஆணைகுழு இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் கருத்துரை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் பருத்தித்துறை மறைகோட்ட இளையோர் ஒன்றியத்திற்கான புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெறறது. பருத்தித்துறை மறைகோட்ட பங்குகளிலிருந்து 60 ற்கும் அதிகமான இளையோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் புனித சவேரியார் குருத்துவக்கல்லுரி நான்காம் ஆண்டு இறையியல் மாணவர்களும் இதில் பங்குபற்றினர்.

IMG-c6575f3a7f3fe9bb1c7e1c8598954b15-V 20180213_122550 20180213_110227

By admin