வன்னி பெருநிலப்பரப்பில், மாங்குளம் குழந்தை இயேசு கிராமத்தில் அமையப்பெற உள்ள இறை தியான இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புனித மரியன்னையின் பிறப்பு விழாவாகிய 08.09. 2021 கடந்த புதன்கிழமை அன்று இடம்பெற்றது. அருட்திரு மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் கட்டட அமைவிடத்தை ஆசீர்வதித்து இறைதியான இல்லத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். முல்லைத்தீவு மறைக்கோட்ட குரு முதல்வர் அருட்தpரு அன்ரனிப்பிள்ளை அவர்களும், முன்னை நாள் குருமுதல்வர் அருட்பணி யாவீஸ் அவர்களும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்கள்.

By admin