2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவுகளின் நினைவுகளை முன்னிறுத்தி மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நினைவேந்நல் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நினைவேந்தல் நிகழ்வில் குருக்கள், துறவியர், பொதுநிலையினர் என பலரும் கலந்து உணர்வுபூர்வமாக பங்குபற்றினார்கள்.

By admin