மானிப்பாய் புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு பங்குமக்களால் பல சிறப்பு நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்திரா அவர்களின் வழிகாட்டலில் பங்குமக்கள் இணைந்து அவர்களுக்கிடையிலான தோழமையொன்றை வளர்த்தெடுக்கும் நோக்கோடு இந்நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிகழ்வுகளில் ஒன்றான சிறுவர்கள்,பெரியோர்கள் இருபாலாருக்குமான மரதன் ஓட்ட நிகழ்வு 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. இப்போட்டியில் ஏராளமானோர் மிக ஆர்வத்துடன் பங்குபற்றினர். தொடர்ந்து அன்று மாலை ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியும் அங்கு நடைபெற்றது.

By admin