அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மாரீசன்கூடல் றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்நிதியத்தின் இயக்குனர் அருட்திரு ஜெயக்குமார் அவர்கள் 91 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். இதற்கான நிதி உதவியை கனடா தமிழ் கத்தோலிக்க புது வாழ்வு நற்செய்தி செபக்குழுவினர் வழங்கியிருந்தனர்.

By admin