யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைக்கோட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான கருத்தமர்வும், தவக்கால தியானமும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.
மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இந்தியா திண்டிவனம் தமிழக ஆயர்பேரவையின் மறைக்கல்வி பணிக்குழு பொது செயலர் அருட்தந்தை ஜோர்ச் சின்னப்பன் அவர்கள் தலைமையில் இத்தியானங்கள் நடைபெற்று வருகின்றன.
இளவாலை மறைக்கோட்டத்தில் கடந்த 01ஆம் திகதி தொடக்கம் 04ஆம் திகதி வரை நடைபெற்ற
இந்நிகழ்வில் 250 வரையான கத்தோலிக்க மற்றும் பங்குமறையாசிரியர்களும், பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் 05ஆம் 06ஆம் திகதிகளில் நடைபெற்ற நிகழ்வில் 170 வரையானவர்களும்
யாழ் மறைக்கோட்டத்தில் 09ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை நடைபெற்ற நிகழ்வில் 60 வரையானவர்களும் கலந்து பயனடைந்தனர்.

By admin