புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இத்திருவிழாவில் திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
கடந்த 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்துள்ளதுடன் 19ஆம் திகதி நற்கருணை விழாவும் நடைபெற்றது. நற்கருணை விழா திருப்பலியை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin