யாழ் நல்லூர் புனித பெனடிற் ஆலயத்தில் 06ம் திகதி கடந்த திங்கட்கிழமை பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் 43 பிள்ளைகளுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கப்பட்டது. பங்குதந்தை அருட்திரு கிறிஸ்தோப்பர் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் இவ் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அத்துடன் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் அப் பங்கில் உள்ள பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது இவ் அருட்சாதன திருப்பலியில் யாழ் மறைமாவட்ட ஆயர் அவர்களால் 86 பிள்ளைகளுக்கு உறுதிப்புசுதல் அருட்சாதனம் வழங்கப்பட்டது. பங்குதந்தை அருட்திரு ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் இவ் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

By admin