42381570_2260168524201365_706787806868930560_oபருத்துறை புனித தோமையார் ஆலயத்தில் 23.9.2018 ஞாயிற்றுக்கிழமை இன்று இளையோர் தின நிகழ்வும் மறைக் கல்விவார ஆரம்ப நிகழ்வும் சிறப்பான முறையில் நடைபெற்றன. இந் நிகழ்வுகளின் ஆரம்பத்தில் பங்கு இளையோர் ஒன்றிய கொடியும் மறைக் கல்வி மாணவர்களின் கொடியும், முறையே யாழ்ப்பாண மறை மாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் , பருத்துறை பங்குத்தந்தை அருட்திரு யாவிஸ் ஆகியோரால் ஏற்றி வைக்கப்பட்டன. தொடர்ந்த இளையோருக்கான சிறப்புத் திருப்பலியும் ஒன்றுகூடலும் நடைபெற்றன. இந்நிகழ்வுகள் பருத்துறை பங்குத் தந்தையினால் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.point

By admin