நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுத்த வெனு அன்னை திருத்தலம் நோக்கிய தமிழர் திருயாத்திரை 13 ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்வருடம் 25வது யூபிலி ஆண்டாக சிறப்பிக்கப்பட்ட இத்திருயாத்திரை நிகழ்வில்பெல்ஜியம் பெனு அன்னையின் திருத்தலத்தில், சமயம், மொழி, இனம் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் மருதமடு அன்னையின் 6அடி உயரம் கொண்ட திருச்சுருபம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இச்சிறப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா அவர்களும் பெனு மறைமாவட்ட ஆயரின் சிறப்பு பிரதிநிதியான டெறிக் டே வியுகிளர் (Deveukelar) அவர்களும் இணைந்து சிறப்பித்தனர்.அன்றைய நாளில் திருமலை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை போல் றொபின்சன் அவர்களின் குணமாக்கல் வழிபாடும் நடைபெற்றது.

By admin