யாழ் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இவ்வருடத்தில் வெளிவந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 18ம் திகதி யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றது.

ஆன்மீகத்துறையில் வெளிவந்த நூல்களில் அருட்திரு றேஜிஸ் இராசநாயகம் அவர்களின் யாதுமானவன் என்னும் நூலும் அறிவியல் துறை சார்ந்து வெளிவந்த நூல்களில் அருட்திரு ஸ்ரலின் அவர்களின் உள குணமாக்கல் முறைகள் என்னும் நூலும் சிறந்த நூல்களாக தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. ஆன்மீக உளவியல் சிந்தனைக கட்டுரையாளர்களாகிய இரு குருக்களுக்கும் யாழ் மறை அலை தொலைக்காட்சி சார்பாக வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

By admin