அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கர்நாடக இசைப்பாடல் மற்றும் பரதநாட்டியப் போட்டிகளில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் முதலிடங்களைப்பெற்று வெற்றியீட்டியுள்ளனர். கடந்த 27ஆம் திகதி அனுராதபுரம் சுவர்ணபாலி மகளிர் பாடசாலையில் இப்போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் கர்நாடக இசைப்பாடல் போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தையும் பரதநாட்டியப் போட்டியில் இக்கல்லூரி மாணவன் மோகனதாஸ் கிசோன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்கள்.

By admin