தேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆசீருடன் தேசிய கத்தோலிக்க வெகுசன ஊடக மத்திய நிலையமும் தேசிய கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 40 கலைஞர்கள் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இக்கலைஞர்கள் தேசிய ரீதியாகவும் மறைமாவட்டங்கள் ரீதியாகவும் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். மறைமாவட்டங்கள் ரீதியாக மறைமாவட்ட சமூகத் தொடர்பு ஆணைக்குழுக்கள் தமக்கு வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தல்களின் பிரகாரம் கலைஞர்களை இவ்விருது பெறுவதற்க்காக தெரிவுசெய்து அனுப்பியிருந்தார்கள். இவ்வகையில் யாழ். மறைமாவட்டத்திலிருந்து நால்வர் இவ்விருதுகளை பெற்றுக்கொண்டர்கள். நாடகத்துறையில் இளவாலைப் பங்கைச் சேர்ந்த திரு. செபஸ்தி றொபின்சன் அவர்களுக்கும் வலைப்பாடு பங்கைச் சேர்ந்த திருமதி. தோமாஸ் மரய கன்னி அவர்களும், பத்திரிகை எழுத்துத்துறையில் யாழ். புனித பேராலய பங்கைச் சேர்ந்த திரு. அலெக்ஸ் அமலரட்ணம் அவர்களும் ஓவியம் மற்றும் கணினி வடிவமைப்பு துறையில் திரு. வெஸ்லி ஜீட்சன் டிவேரா அவர்களும் இவ்விருதுகளை பெற்றுக்கொண்டார்கள். 2018 ஆம் ஆரம்பிக்கப்பட்ட இவ்விருது வழங்கும் நிகழ்வு மூன்றாவது தடவையாக இவ்வருடமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் மறைமாவட்ட பங்குகள் ரீதியாக பல துறைகளிலும் பணியாற்றும் கலைஞர்களின் பணியின் பெருமைகளை வெளிக்கொணர்வதாகவும் இந்நிகழ்வு அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin