கனடா திருமறைக் கலா மன்றத்தின் நிதி அனுசரணையுடன் யாழ். திருமறைக் கலாமன்றத்தினூடாக மிகவும் தேவையுள்ள சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வாரங்களில் நடைபெற்றுள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாங்குளம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட சிறுவர் இல்லங்கள், செவிப்புலனற்ற சிறுவர்கள் போன்றோருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு வருடந்தோறும் கனடா திருமறைக் கலா மன்றத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெற்றுவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin