42974439_2264952720389612_2234933172171177984_nயாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவும் இளையோர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய குறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்ட ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு 30.9.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அரங்கில் சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வினை பங்கு இளையோர் ஒன்றியத் தலைவர் திரு.எமிலியன் குருசோ தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சிறுவர் பாதுகாப்பு மையத் தலைவர் திரு. அருந்தவபாலன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் குறும்படத்திற்கான ஆய்வுரையை எதிரொலி பத்திரிகை ஆசிரியர் திரு. பிரபாகரன் நிகழ்த்தினார். குருக்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள் என நூற்றுக்கும் அதிகமானேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள். சாவகச்சேரி பங்குத்தந்தை அருட்திரு றெக்ஸ் சவுந்தரா நெறிப்படுத்தலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்தது.42894614_2264951707056380_5446245623428808704_n 42909321_2264951557056395_397545926719176704_n 42983472_2264951597056391_4349675717538086912_n 42899092_2264952417056309_5787170266140377088_n

By admin