கிளிநொச்சி மறைக்கோட்டத்திலுள்ள குமுழமுனைப்பங்கில் முன்னெடுக்கப்ட்ட ஆன்மீகப் புதுப்பித்தல் தியான நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனித தோமையார் ஆலயத்தில் இவ்வாரம் நடைபெற்றது.
கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகி 19ஆம் திகதி வரை மன்னார் கள்ளிக்கட்டைக்காடு டிவைன் மெர்சி தியான இல்ல இயக்குனர் அருட்தந்தை ரபாயேல் மற்றும் அவரது குழுவினரால் முன்னெடுக்கபட்ட இத்தியான நிகழ்வில் குடும்பத் தரிசிப்பு, நற்கருணை வழிபாடு, குணமாக்கல் வழிபாடு, சிலுவைப்பவனி, குடும்ப உறவுகளுக்கான சிறப்பு வழிபாடு, இறைவார்த்தை வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இத்தியானத்தில் பங்குமக்கள் மற்றும் அயற்பங்குமக்கள் இந்து சமய மக்களெனப் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

By admin