திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் ‘கலைமுகம்’ கலை இலக்கிய சமூக இதழின் ஏப்பிரல் – செப்ரெம்பர் 2021 காலப்பகுதிக்குரிய 72 ஆவது இதழ் வெளிவந்துள்ளது. திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநராகவும், ‘கலைமுகம்” இதழின் பிரதம ஆசிரியராகவும் இருந்து கடந்த ஏப்பிரல் அமரத்துவமடைந்த கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகளாரின் நினைவுகளின் சில பக்கங்களைச் சுமந்து வந்துள்ள இந்த இதழில், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நூல் மதிப்பீடுகள், அஞ்சலிகள் போன்ற பல்வேறு விடயங்களும் இடம்பெற்றுள்ளன. கலைமுகம் இதழ் கடந்த 32 ஆண்டுகளாக தெடர்ச்சியாக திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin