வருடந்தோறும் கர்த்திகை மாதத்தில் நடைபெறும் மறை ஆசிரியர் முதலாம் இரண்டாம்மூன்றாம் பிரிவுகளுக்கான தேசியத் தேர்வுஇ இவ்வருடம் திகதி மாற்றம் செய்யப்பட்டுஇ டிசம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கும்இ கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற திருவிவிலிய அறிவுத் தேர்வு நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக 2022 ம் ஆண்டிற்கும் பிற்போடப்பட்டுள்ளதென யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்திரு ஜேம்ஸ் அவர்கள் அறிவித்துள்ளார். அத்துடன் பங்கு மறைக்கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள மறை ஆசிரியர்களுக்கு கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 2021 ஆண்டுக்கான கொடுப்பனவு பங்குத்தந்தையர்கள் ஊடாக யாழ். மறைமாவட்டத்தைச் சேர்ந்த 1541 மறை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

By admin