கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் கிளிநொச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளிலும், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள விசேட தேவையுடையோரின் மேம்பாட்டிற்கென சமூகம் சார் நிகழ்ச்சி திட்டத்தினை கடந்த வருடம் யூன் மாதம் முதல் முன்னெடுத்து வருகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக தெரிவுசெய்யப்பட்ட 162 விசேட தேவையுடைய பிள்ளைகளின் குடும்பங்களுக்கு இந்நிறுவனம், அனைத்துலக மருத்துவநல அமைப்பின் அணுசரனையுடன் ரூபா 2,000.00 பெறுமதியான உணவுப்பொதிகளை 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை வழங்கிவைத்துள்ளது.

By admin