பிப்.17. கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா இவ்வருடம் மாசி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாலயத் திருவிழா தவக்காலத்தில் வரும் இரண்டாவது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படும் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இதற்குரிய ஆயத்தங்களை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்திரு எமில் போல் அடிகளார் மேற்கொண்டுள்ளார். இவ்வருடம் இத்திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்தும் இலங்கையின் தென்பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin