_MG_0082டிச.9 யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் அமரர் அருட்பணி சரத்ஜீவன் ஞாபகார்த்த கிறிஸ்து பிறப்பு குழு பாடல் போட்டி இன்று காலை  மறைகல்வி நிலையத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றிய இயக்குனர் அருட்பணி அன்ரன்   ஸ்டீபன் தலைமையில்  மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இப்போட்டியில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்குகளிலிருந்து 13 இளையோர் ஒன்றிய குழுக்கள் மிகவும் ஆர்வத்துடன் இபோட்டியில்  பங்குபற்றி நிகழ்வினை சிறப்பித்தார்கள். அமரர் அருட்பணி சரத்ஜீவன் அடிகளாரின் சகோதரி நித்திலா மரியாம்பிள்ளை ஒளியேற்ற மறைகல்வி நிலைய இயக்குனர் அருட்பணி பெனட் அடிகளார் ஆசீர் வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள். ‘இளையோர் நாம் – கிறிஸ்துவின் ஒளியில் மாறிடுவோம் மாற்றத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் புத்தாக்க பாடல்களாக  அனைத்து பாடல்களும்  அமைந்திருந்தன. இப்போட்டியில் முதலாம் இடத்தை வசாவிளான் புனித யாகப்பர் ஆலய இளையோரும், இரண்டாம் இடத்தை முழங்காவில் செபமாலை மாதா ஆலய இளையோரும், மூன்றாம் இடத்தை மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோரும் பெற்றுக்கொண்டார்கள். இவர்களுக்கான பரிசில்களை  யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் வழங்கினார். இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து  இளையோர் ஒன்றியத்தினருக்கும் நினைவு பரிசில்கள் வழங்கப்பட்டன.

 

_MG_9893_MG_0028_MG_9946_MG_9900_MG_9957_MG_0047_MG_0041_MG_0066_MG_0071_MG_0103

By admin