வன்னி கியுடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான ஊடக நிகழ்ச்சி தயாரிப்பு தொடர்பான கருத்தரங்கு 6ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் நடைபெற்றது.

மறைநதி ஊடக மைய இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்ரீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் ; படப்பிடிப்பு, படத்தொகுப்பு, தொடர்பான பயிற்சிகளுடன் பங்கேற்பாளர்களினால் நேர்காணல் நிகழ்வு ஒன்றும் தயாரிக்கப்பட்டு you tube சமூக வலைத்தள ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

By admin