44661668_2160544893965032_5769752524487655424_n12 October 2018. இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை திருகோணமலை மறைமாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி எடுத்துவரப்பட்டு கொக்கிளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னைமர வாடி என்னும் இடத்தில் வைத்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சிலுவை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைதீவு, கிளிநொச்சி, பருத்துறை, இளவாலை, தீவகம், யாழ்ப்பாணம் ஆகிய ஆறு மறைக்கோட்டங்களுக்கும் எடுத்துசெல்லப்பட்டு சில குறிப்பட்ட ஆலயங்களில் தரித்துவைக்கப்பட்டு திருப்பலிகளும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து இச்சிலுவை மன்னார் மறைமாவட்டத்திற்கு எடுத்துசெல்லும் முகமாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரினல் மன்னார் மறைமாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள வெள்ளங்குளம் பிரதேசத்தில் வைத்து மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி இம்மானுவல் பெர்னாண்டோ அவர்களிடம் 22.10.2108 இன்று காலை கையளிக்கப்பட்டது.44602267_2160545480631640_15132827641184256_n44557268_2160545647298290_5360932695163535360_n44546756_2160545567298298_3894757338506067968_n44576968_2160545400631648_1773575043729588224_n

By admin