26993894_1660232967367479_4792670418615317268_nசன.25. கடந்த பத்து வருடங்களாக புனித. பத்திரிசியார் கல்லூரியின் 23 ஆவது அதிபராக அரும்பணியாற்றிய அருட்திரு.ஜெறோ செல்வநாயகம், இன்று (25.01.2018) தனது 60 வது அகவையில்   அதிபர் பணியிலிருந்து ஒய்வுபெறுகின்றார். இவர் கரம்பன் மண்ணில் பிறந்து 1985 ஆம் ஆண்டில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, யாழ். மரியன்னை பேராலயம், வட்டக்கச்சி, கரவெட்டி ஆகிய பங்குகளில் பணியாற்றி, 1989 இல் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராக தனது பணியை ஆரம்பித்தார். இவர் இப்பணியில் மேற்படிப்புகள் பலவற்றை மேற்கொண்டு 1997 இல் இலண்டன் பல்கலைக் கழகத்தில் கல்வி முது மானிப் பட்டத்தை பெற்று தன் புலமையை விருத்திசெய்து  29 வருடங்களாக  ஆசிரியர் பணியாற்றியுள்ளார். இவர் 2008  இல் புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபராக பணியேற்று 10 வருடங்கள் அதிபராக பணிபுரிந்து  கல்விப்பணியில் மகத்தான சேவைகளை  ஆற்றியுள்ளார்.

By admin